×

தமிழ்நாட்டில் வழக்கம்போல் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்துப்போயினர். திருப்பத்தூர், சேலம், வேலூரில் தலா 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. கரூர் பரமத்தி 106, தருமபுரி, திருச்சியில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. மதுரை விமான நிலையம், திருத்தணி, மதுரை நகரம், தஞ்சை, கோவையில் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. நாமக்கல் 102, கோவை 102, சென்னை மீனம்பாக்கத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாட்டில் வழக்கம்போல் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Erode ,CHENNAI ,Tirupattur ,Salem ,Vellore ,Karur Paramathi ,Dharmapuri ,Trichy ,
× RELATED ஈரோட்டில் தனியார் இ-சேவை மையங்களில் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல்